வெள்ளி, 31 டிசம்பர், 2021

அட நான் கொல்லலைங்க.. நிகழ்வு- 2

எதுல முடிச்சேன். ஹான்.. கடவுள் வச்ச ட்விஸ்டு.. 

அஞ்சு லட்சம் எப்டியாச்சும் சேத்துரணும்னு அலஞ்சு அலஞ்சு ஒன்னும் கெடைக்காம நொடிஞ்சு போய் ஒரு பஸ் ஸ்டாண்ட் ஓரத்துல சாஞ்சு உக்காந்துருந்தேன். 

அப்ப ஒரு ஆளு, ஒரு அம்பது வயசு இருக்கும். திருதிருனு முழுச்சுக்கிட்டு கைல ஒரு பெரிய பைய வச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தாரு. யாரு அவரப் பாத்தாலும் பணம் நெறய வெச்சுருப்பாரோனு யோசிக்க தானே தோனும். அப்டி தான் எனக்கும் தோனுச்சு. அதுக்காக நான் இப்ப திருடப்போறேன்னு நெனச்சுராதீங்க. கண்டிப்பா இங்க நான் தப்புப்பன்ல.

எப்டி தான் சம்பாரிக்கிறாங்களோனு ஒரே யோசனை மட்டும்தான். அந்தாளு மூஞ்சிய பாத்தா எதோ அவசரம்னு மட்டும் தெரிஞ்சுது. திடீர்னு பாத்தா ஒருத்தன் சட்டுனு அவர் கைல இருந்து பையப்பரிச்சுட்டு ஓடிட்டான். இதை அந்த ஆளு சுத்தமா எதிர்பாக்கல. பதறிப்போய் அவரு கத்த ஆரம்பிச்சுட்டாரு. "பணம், பணம் என் பணம்" அப்டினு. ஆனா யாருமே கண்டுக்கல.

பசியோட இருந்தாலும் பாவம் அந்த மனுஷன்னு அந்த திருடன எப்படியாச்சும் புடிச்சுரணும்னு தொரத்த ஆரம்பிச்சேன். ஆனா அந்தப்பக்கி ஒலிம்பிக்ஸ்ல ஓட்ற மாறி அந்த ஓட்டம் ஓட்றான். கஷ்டப்பட்டு அவன் பக்கத்துல நெருங்கிட்டேன். 

நில்ரா, நில்ரா அப்டினு கத்துனேன். அவன் என்ன நெனச்சானோ தெரில, ஒரே எடத்த சுத்த ஆரம்புச்ட்டான்.  அட ஓட்டத்துக்குப்பொறந்தவனே,நில்ரானு கத்துனேன். அவன் பதுலுக்கு, இது உன் காசு இல்ல, பேசாம போயிரு, இல்லனா உனக்குதான் பிரச்னைனு சொன்னான். ஒரு நூலு அவன் ஸ்லோ ஆனான், அதான் சாக்குன்னு  சட்டுனு அவன் கைல இருந்து பையப்பருச்சுட்டேன். அவன் சுதாரிக்கிறதுக்குள்ள திருப்பி ஓட ஆரம்பிச்சுட்டேன். இப்ப அப்டியே மாறிடுச்சு, என்னய அவன் தொரத்த ஆரம்பிச்ட்டான். 

அப்பதான் தெரிஞ்சுது, பணத்த பறிகுடுத்த ஆளும் அவனத்தொரத்திருக்காருனு, ஆனா நான் எதிர்பாக்காத ஒன்னு, அந்தாளு ஒரு லாரில அடிபட்டு அங்கயே செத்துட்டாருனு!!. இதப்பாத்துட்டு அந்தத்திருடன் அப்புடியே ஜகா வாங்கிட்டான். அவன் புத்திசாலி, ஆனா அப்ப அது எனக்கு புரில. 

அடப்பாவிகளானு அங்கயே உக்காந்துட்டேன் தலயப்புடிச்சுக்கிட்டு. மெதுவா அந்தப்பைய தொறந்து உள்ள என்ன இருக்குனு பாத்தேன். உள்ள கொறஞ்ச பச்சம் இருபது லட்ச ரூபாயாச்சும் இருக்கும். வாய பொளக்ரதா இல்ல அங்க வாயப்பொளந்துக் கீழ கெடக்கரவருக்கு ஏதாச்சும் பண்ணணுமானு ஒன்னும் புரில.

இப்ப நீங்களே சொல்லுங்க, என்னோட சூழ்நிலக்கி என்ன பண்ணலாம்னு. 

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

அட நான் கொல்லலைங்க.. நிகழ்வு- 1

 

வாழ்க்கையில் எவ்வளவோ அதிசயம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஏதாவது நம் வாழ்வில் நடந்திருக்குமா என்றால் கண்டிப்பாக கேள்விக்குறிதான். ஒரு வேலை நம்ப முடியாத விஷயம் நம் வாழ்க்கையில் நடந்தால்? அதுவும் நம் வாழ்க்கையை ஒரே அடியாக புரட்டிப்போட்டால்? அப்படி என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் தான் இந்த கதைக்கு மூலதனம்.

 

இவ்வளவு அறிவா பேசுறானேன்னு நெனைக்காதீங்க . உண்மைய சொல்லனும்னா நான் ஒரு திருடன். நீங்க என்ன நெனைப்பீங்க, திருடன் வாழ்க்கையில மிஞ்சிப்போனா என்ன நடந்துருக்கும்,  திருடிருப்பான் போலீஸ் கிட்ட மாட்டிருப்பான், அதானே நெனைக்கிறீங்க. அதான் இல்ல. விக்ரம் சார் சொல்ற மாரி சொல்லனும்னா "அதுக்கும் மேல". சரி டா ரொம்ப பேசாம கதைக்கு வா அப்டினு சொல்றது தெரியுது.. இதோ..

 

நெறய பேரு, செய்யாத தப்புக்கு மாட்டி பாத்திருப்பீங்க. நானும் அப்படி தான் மாட்னேன். இதுல என்ன இருக்குனு கேக்கலாம். என்னைய  ஒரே நாள்ள திருடன்ல இருந்து கொலைகாரனா மாத்திட்டாங்க. இப்படி தானே தப்பு பண்ணாதவங்கள்லாம் மாட்டுவாங்கன்னு நீங்க கேக்கலாம். இங்க பிரச்சினையே, அவங்க என்னைய விட்டுட்டாங்க, ஆனா வாயக்குடுத்து நானே மாட்டிகிட்டேன்.

கொலைகாரன் ஆயிட்டியா? அப்பறம் என்னடா அதிசயம்னு கேக்குறீங்களா? கதையப்படிங்க தெரியும். ஹாஹா. இப்பவே சொல்லிருவேனா எல்லாத்தையும். பொறுமையா படிங்க சொல்றேன்.

என் பேரு ராசு. ஊரு கோயம்புத்தூரு. ஏதாவது பண்ணி உறுப்புற்றலாம்னு சென்னைக்கு வந்தேன். மாசக்கணக்குல வேலை தேடி அலைஞ்சேன். ஒருத்தனும் வேலை தர மாட்டேன்டான். அப்பயும் விடாம வேலை தேடிட்ருந்தேன். அப்பதான் ஊர்ல இருந்து அந்த போன் என்னைய இப்படி யோசிக்க வச்சுச்சு. எங்கம்மா வழுக்கி விழுந்து ஆஸ்பத்திரியில உசுருக்கு போராடிட்ருக்காங்க, ஒடனே அஞ்சு லட்சம் வேணுண்டாரு அப்பா. நமக்கு இங்க சோத்துக்கே வலி இல்ல, இதுல அஞ்சு லட்சத்துக்கு எங்க போறதுன்னு புலம்ப மட்டும் தன் என்னால முடிஞ்சுது.

 

ரெண்டு நாள்ல ஏற்பாடு பன்றேன்னு சொல்லிட்டு கடன் கேட்டு அலைய ஆரம்பிச்ட்டேன். ஆனா சுத்தமா கெடைக்கல. அப்பதான் கடவுளாப்பாத்து காசு குடுத்தாரு.. ஆனா அதுலயும் ஒரு ட்விஸ்ட் வச்சாரு..

அட நான் கொல்லலைங்க.. நிகழ்வு- 2

எதுல முடிச்சேன். ஹான்.. கடவுள் வச்ச ட்விஸ்டு..  அஞ்சு லட்சம் எப்டியாச்சும் சேத்துரணும்னு அலஞ்சு அலஞ்சு ஒன்னும் கெடைக்காம நொடிஞ்சு போய் ஒரு ப...